Tuesday, September 27, 2011

கடந்த விழாக்களில்........



















அறிந்துகொள்வோம் இவர்களை!தெரிந்துகொள்வோம் இவர்களின் சேவையை!

அன்புடையீர், வணக்கம்.
(2010, செப்டபர் 12 அன்று திருச்சி மாநகரில் நிகழ்ந்த நமது ‘SMS கவிஞர்களின் நான்காவது சந்திப்பு / ஆண்டுவிழா’விற்கு வருகைதந்து சிறப்பித்த எனது அன்பு நண்பரும், முன்னாளில் SMS கவிதையுலகில் பிரவேசித்து, இப்போது இணையதளத்தில் “தமிழ்த்தென்றல்” என்னும் குழுமத்தின் பொறுப்பாளராகவும், பல வலைத்தளங்களுக்கும் சொந்தமான, திரு. ந.உ.துரை (தூத்துக்குடி) அவர்கள், நமது ஆண்டுவிழா பற்றி இணைய தளத்தில் அளித்துள்ள விமரிசனத்தை இங்கே உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
- கிரிஜா மணாளன்
==============================================================================


அறிந்துகொள்வோம் இவர்களை!
தெரிந்துகொள்வோம் இவர்களின் சேவையை!
========================================

12.09.2010 ஒரு சந்திப்பு. 70 பேர் சந்தித்துக்கொண்ட ஒரு
சிறிய சந்திப்பு. ஆனால், தமிழுலகம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய
மானதொரு சந்திப்பு. குறுந்தகவல் (SMS) பரிமாற்றத்தை அடிப்படையாகக்
கொண்ட கலைஞர்கள் சந்தித்துக்கொண்ட ஒரு முப்பெரும் விழா!
எளியோரின் இணையமாக மாறியிருக்கும் அலைபேசித்தகவல் பரிமாற்றத்தின் இன்னுமொரு பரிணாமவளர்ச்சியின் சாட்சியான சந்திப்பு இது. இதற்குப் பின்புலமாக மறைந்திருக்கும் சக்திகளை வெளிக்காட்டும் என் பதிவு இது.
SMS குறுந்தகவல் செய்தி: இன்றைய ‘தொலைத்தொடர்பில்’ மிக முக்கியமான ஒன்று. விளம்பர நிறுவனங்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி ‘தொல்லைத் தொடர்பாக’ மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இனிய ஊக்கமளிக்கும் செய்தியும் இதில் உண்டு. ஆம்! குறுந்தகவல் இதழ்கள்!
குறுந்தகவல் இதழ்கள்: 20க்கும் மேற்பட்ட குறுந்தகவல் இதழ்கள். தினம் ஒரு படைப்பாளியின் படைப்பினை, கவிதையினை, கருத்தினை தமிழகம் முழுவதும் குறைந்தது 10000 வாசகர்களிடம் குறுந்தகவல் மூலமாகக் கொண்டுசேர்க்கின்றன இவைகள். கண்காணாத இடத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, அவர்களின் படைப்புகளை வெளியிட்டு வெளி யுலகுக்குக் காட்டி, ஊக்கமூட்டி, பல புதிய கவிஞர்கள், கலைஞர்களை உருவாக்கி வருகின்றன.
முன்பெல்லாம், படைப்புகளை உருவாக்கி, பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு, வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த கவிஞர்கள், கலைஞர்கள் ஏராளம். பொதுப்பார்வைக்குச் சமர்ப்பிக்கும் முறையறியாமல், புதைந்துபோன புதையல்களோ ஏராளம்! ஏராளம்!! இன்று நிலைமை மாற்றம் வந்திருக்கிறது. மாற்றாக, ஒரு புதிய தொழில்நுட்பம் துணைக்கு வந்திருக்கிறது. தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம்போல... கணினி யில் இணையதளம் தொடமுடியாதவர்களின் முன்னால், விரல் நுனியில் ஒரு இலவசப் பதிவுலகம்! அலைபேசியால் இணைக்கும் அற்புத உலகம்!
முக்கியச் செய்தி : இந்தச் செய்தி பரிமாற்றம் ஒரு இலவசச்சேவை. இவை ‘இணைய கூகுள் குழுமங்கள்’ (http://groups.google.co.in) போன்ற இலவசச் சேவை. ஆனால், அவைகளைப்போல பலம்படைத்த பின்னணி கொண்டவை அல்ல. ஆம், ஒவ்வொரு குறுந்தகவல் இதழாசிரியரும் தனிமனிதனாய் நின்று தமிழுக்கு ஆற்றும் சேவை இது.
இந்த இதழ்களைத் தலைமைதாங்கி நடத்துபவர்களெல்லாம் வாழ்க்கையில் வசதியான இடத்தில் இல்லை. தானிருக்கும் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் பொருளாதார பலமில்லாத நடுத்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சராசரியானவர்கள் தான்.
தனது தினக்கூலியிலிருந்து - மாத வருமானத்திலிருந்து தொகையை ஒதுக்கி, இச்சேவை யைத் தொடர்பவர்களும் இதில் உண்டு. பணிச்சுமைக்கு இடையிலும் குடும்பச்சூழலுக்கு இடை யிலும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஊடாகவும் கடமையாக நினைத்து கருத்துடன் செயல் பட்டுக்கொண்டிருக்கும் செயல்வீரர்கள் இவர்கள்! எந்தவிதப் பலனும் எதிர்பாராமல், இவர்கள் ஒவ்வொருவரும் பிற முகமறியாத கலைஞர்களின் படைப்புகளை 500லிருந்து 1000பேர் வரையிலும் கொண்டுசேர்க்கிறார்கள் குறுஞ்செய்தி (SMS) மூலமாக.
“அப்படி என்னய்யா வந்துச்சு இவங்களுக்கு? பேசாம இருக்கவேண்டியதுதானே! எதுக்கு தேவையில்லாம இழுக்கணும்? சுமக்கணும்...?” - இப்படி பல கேள்விகள் தோன்றலாம் சிலர் மனதுக்குள்.
அதற்கான விடையை என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன். தொடர்ந்து வருவது தற்பெருமை இல்லை. உண்மையை உலகுக்குச் சொல்லும் வேளையில், (நெல்லுக்கு நீர் பாய்ச்சும் வேளையில், சரிவிலுள்ள புல்லுக்கும் சிறிது கசிவதுபோல) வெளிப்படும் செய்தி இது.
நான் பிறந்த இடம் இது :
நான் ஒரு கட்டுமானப் பொறியாளர். ஆங்கிலவழியில் கல்வி கற்று, கல்லையும், மண் ணையும், கலவையையும், கட்டுமானத்தையும் தவிர எதுவும் தெரியாத நான், 2008 வரையில் பத்திரிகைகள் வாசிக்கும் வழக்கம்கூட இல்லாதவன். விளையாட்டாய் நான் எழுதிய ஒரு 3 வரிகளை திரு. கன்னிக்கோவில் ராஜா அவர்கள் (திருத்தம் செய்து) அவரது SMS இதழில் நான் எதிர்பார்க்காத வேளையில் வெளியிட்டார். நமது படைப்பை கண்முன்னால் பார்க்கும் வேளையில், ‘நம்மாலும் முடியும்’ என்ற எண்ணம், தன்னம்பிக்கையை என்னுள் ஆழமாய் விதைத்து விட்டது அந்த ‘குறுந்தகவல்’ செய்தி.
‘அட! நமக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறதே! முயன்றால் நம்மாலும் முடியும்போல!’ என்று என்னை திசை திருப்பிவிட்டது அது.

இரண்டே வருடங்கள். குறுஞ்செய்தி இதழில் அறிமுகமாகி, இணையத்தில் இணைந்து (நன்றி: திருச்சி, கிரிஜா மணாளன் அய்யா அவர்களுக்கு), இன்று எனக்கென பல வலைப்பூக்களை (Blogspot) உருவாக்கியுள்ளேன். ஒருங்குறி தமிழில் ஒரு விரல் தட்டச்சில், ஓரளவு வேகம் காட்டு கிறேன். கவிதைகளாய் கொடுக்கிறேன். வெண்பாவாய் வடிக்கிறேன். குறும்பாக்கள் தொடுக்கிறேன். திருக்குறளுக்கு விளக்கமாக (குறளுரையாக) புதிய குறள்களை வெண்பாவில் அமைத்திருக்கிறேன் - எனக்குத் தெரிந்த அளவில்.
குறுஞ்செய்தி இதழ்களின் விளைவுக்கு நானே நேரடிச் சான்று. எங்கோ ஆரம்பித்து, எப்படியோ சென்றுகொண்டிருந்த நான், இன்று இங்கே வந்து நிற்கிறேன்! (இது நல்லதா கெட்ட தான்னு நீங்கதான் சொல்லணும்!) மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இங்கிருந்து உருவாகியிருக் கிறார்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்!
தமிழகத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் குறுந்தகவல் (SMS) இதழ்களும், ஆசிரியர்களும்
1. KKRன் SMS ஹைக்கூ இதழ் -கன்னிக்கோவில் ராஜா சென்னை.(9841236965) 2. தேசிங்குராஜா குறுஞ்செய்தி இதழ் -இயற்கை சிவம், விழுப்புரம்.( ) 3. KKI குறுஞ்செய்தி இதழ் -கொள் ளிடம் காமராஜ், திருச்சி. (9894058651) 4. சுந்தர் குறுஞ்செய்தி இதழ் -க. அண்ணாமலை, ஆரணி. (9842106170) 5. மழைத்துளி குறுஞ்செய்தி இதழ் - சத்யா,அய்யாவாடி(9976003666) 6. எண்ணத்தின் வண்ணம் -எம்.எஸ்.பாபு, திருச்சி. (9976546735) 7. ஜெயம் குறுஞ்செய்தி இதழ் – ஜெயக்குமார், அந்தியூர் (9842163703) 8. வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ் - வி.பாரதிராஜா (9894887705) 9. சம்பூரணம் குறுஞ்செய்தி இதழ் - தமிழாளி, அழகாபுரம் (8144160620) 10. ராகா குறுஞ்செய்தி இதழ் - ராஜீவ் காந்தி, செய்யாறு (9786098440) 11. செந்தமிழ் குறுஞ்செய்தி இதழ் - அ.ராஜீவ் காந்தி, செய்யாறு (9688429731) 12. சித்தன் குறுஞ்செய்தி இதழ் - நித்யானந்தம், மாமண்டூர் (9095942789) 13. தெனாலி குறுஞ்செய்தி இதழ் -கலைவாணி, அரியூர்(9488044578) 14. உதயம் குறுஞ்செய்தி இதழ் -செல்லதுரை, ஓசூர் (9488387886) 15. சிற்பி குறுஞ்செய்தி இதழ் -ரம்யா, கோட்டக்குளம் (9578129090) 16. லிங்கம் குறுஞ்செய்தி இதழ் -ராமலிங்கம், சிறுவந்தாடு (9976227703) 17. பரவசம் குறுஞ்செய்தி இதழ் -ஜானி அந்தோனிராஜ், திருச்சி (9789165275) 18. ஜாலி கவிக்கடல் - ஹயத் பாஷ¡, சென்னை (9952071178) 19. தெரியுமா? குறுஞ்செய்தி இதழ் -•ப்ராங்ளின் குமார், மதுரை.(9843921471) மற்றும்....20. யாழிசை - யாழி, கோவை (9976350636)

வேரின்றி மண்ணிலே நிற்பதாய் எண்ணியே
பாரமாய் எண்ணாதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரப் பாய்வோம்; யாம்
பாரதியின் அக்கினிக் குஞ்சு.
இந்த வித்தையை என்னுள் விதைத்தவர்கள் இவர்கள். புதிய படைப்பாளியை உருவாக்கும் இவர்களின் உன்னத உள்ளத்தை உணர்ந்துகொள்வோம்! இவர்களின் தன்னலமில்லாத உழைப்பு சிறக்க வாழ்த்துவோம்!! வழக்கம்போல் நான் தாமதம். கோவையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு 11 மணிக்குக் கிளம்பி, 01.45க்குத்தான் திருச்சி விழாவுக்குப்போய்ச் சேர்ந்தேன். காலை நிகழ்ச்சி முடிந்து பலர் கிளம்பியிருந்ததால் பலரைச் சந்திக்க இயலவில்லை. வாழ்க உறவுகள்!
என்றும் அன்புடன்,
துரை ந.உ.
அ.பே: 9443337783
மின்னஞ்சல்: vce.projects@gmail.com
இணையத்தில் எனது வலைத்தளங்கள்:
1. http: //marabukkanavukal.blogspot.com (வெண்பாக்கள்: ‘மரபுக்கனவுகள்’),
2. http://duraikavithaikal.blogspot.com கவிதைகள்: கனவு மெய்ப்படவேண்டும்’
3. http://duraihaikoo.blogspot.com ஹைக்கூ: ‘வானம் வசப்படும்’
4. http://duraipathivukal.blogspot.com பதிவுகள்: ‘வல்லமை தாராயோ’
5. http://duraikanavukal.blogspot.com கதைகள்: “நானோ கனவுகள்’
6. http://groups.google.co.in/group/thamizhthendral குழுமம்: ‘தமிழ்த்தென்றல்’

Sunday, September 25, 2011

அன்புடன் அழைக்கின்றோம்!





அன்புடன் அழைக்கின்றோம்!
=========================

எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
(NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001

சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத்தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.

குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.

இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.


ஒருங்கிணைப்பாளர்: கிரிஜா மணாளன், திருச்சி


விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்

Friday, September 16, 2011

உங்களுடன்..............



கவிதை எழுவதிலும், பிறர் கவிதைகளை ரசிப்பதிலும் என் ஓய்வுநேரத்தின் பெரும் பகுதியைச் செலவிடும் எனக்கு, இதழுலகில் வாய்ப்புகள் கூடி வருமுன், தற்போது பிரபலமாகியுள்ள “அலைபேசி குறுந்தகவல்” வாயிலாக படைப்பாளர்கள் அனுப்பி வரும் “குறுந்தகவல் கவிதைகள் ஊடகம்” நல்ல வரவேற்பையும், வாய்ப்புகளையும் அளித்து வருகிறது. எனது இணைய நண்பர்கள் வாயிலாக, பல இணையதளங்களில் எனது படைப்புகள் பிரசுரமாகி, என்னை மகிழ்வித்துவரும் நிலையில், நமக்கென்று ஓர் வலைத்தளத்தை உருவாக்கி, அதில் நம் கவியார்வத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு நான் துவக்கியுள்ள வலைத்தளம் இது.

எங்களது “குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப”த்தின் ‘ 2 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் 6 வது சந்திப்பு விழா நிகழும் இவ்வேளையில் எனது இந்தக் கவிதைத்தளம் துவங்கப்படுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன். எனக்கு இம்முயற்சியில் வழிகாட்டியாக இருக்கும் மதிப்பிற்குரிய படைப்பாளரும், இணையதளங்களில் எங்கள் கவிஞர்களை அறிமுகப்படுத்தி உலகளாவிய வாசகர்களைப் பெற்றுத்தந்துள்ள திரு. கிரிஜா மணாளன் (செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்/ திருச்சி மாவட்டக்கிளை) அவர்களுக்கு எனது நன்றி!

இதில் எனது படைப்புகளோடு, எங்கள் “அலைபேசி குறுந்தகவல் கவிஞர்கள்” பலரது கவிதைகளும் இடம்பெறவிருக்கின்றன.
என் அன்புக்குரிய இணய வாசக அன்பர்கள் அவற்றை ரசித்து, அளிக்கும் பின்னூட்டங்கள் எங்கள் கவியாற்றலை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள துணையா யிருக்கும் என்ற நம்பிக்கையோடு துவங்குகிறேன்.

நன்றி

அன்புடன்,

சேலம் சுமதி

====================================================================