Tuesday, October 25, 2011
இணைய நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
- எஸ்.சுமதி
Editor
- கிரிஜா மணாளன்
Consultant
Saturday, October 22, 2011
Thursday, October 20, 2011
என்னில் உன்னை!
================
நினைத்தேன் உன்னை
மழையெனப் பொழிந்தாய் அன்பாய்,
ஆயினும்
வறண்ட நிலமாய் நான்!
உன்னில் கிளர்ந்தெழும் கடுங்கோபம்
என்னில் உன்னை
நீர்த்துப்போகச்செய்திடுமோ?
எனக்கும் உனக்குமான
அன்புப் பரிமாற்றத்தினிடையே
தலைதூக்கும் சர்ப்பத்தின்
கழுத்தை நசுக்கி
கைகோர்ப்போம்!
============================
கேள்விக்குறி போட்டு
வியப்புக்குறியாய் மாறி
முற்றுப்புள்ளியாய் மாறாமல்,
தொடர்புள்ளியாய்.........
தொடரட்டும் நம் நட்பு.
கவிதையின் வரிகளாக
கவிதையின் பொருளாக
கவிதையின் இலக்கணமாக நாம்!
எதற்கு வேறொரு புதுக்கவிதை,
தோழா?
=============================
தடித்த உன் வார்த்தைகளால்
எரிந்துபோய்விட்ட என்னை
மீண்டும் எரிக்கமுடியாது உன்னால்
சாம்பலாகிப்போன என்னை.
---------------------------------
மகாராணியாக
மனோபலத்துடன் ஆடுகிறேன்
ராஜா வீழ்ந்தபின்னும்
இதர சேனைகளுடன்
அந்த சதுரங்க விளையாட்டில்.
---------------------------------
சுமதியின் கவிதைகள்!
அன்பார்ந்த கவிதை ஆர்வலர்களே!
வணக்கம்.
நமது குறுஞ்செய்தி (SMS) கவிஞர்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் சகோதரிகளில், நான் அண்மையில் நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் ஆண்டுவிழாவில் சந்தித்த திருமதி சுமதி அவர்களும் ஒருவர்.
சுமதியின் கவிதைகள் எனது வலைத்தளங்களிலும், பெரிய கவிதைத் தளமான www.vaarppu.com மிலும் உலகளாவிய பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளன. சமுதாயப்பார்வையும், பெண்ணியச் சிந்தனைகளும் பொதிந்த இவரது கவிதைகள் நான் அங்கம் வகிக்கும் www.groups.google.com/group/ anbudan, thamizhthendral & thamizh amutham, muththamizh குழுமங்களில் வெளிவரவிருக்கின்றன. இணையதளக் குழுமங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ள குறுஞ்செய்திக் கவிஞர்கள் திருமதி தனலட்சுமி பாஸ்கரன், ரம்யா, கலைவாணி ஆகியோரைத் தொடர்ந்து, திருமதி சுமதி அவர்களும் புகழ்பெற்றுத் திகழ எனது நல்வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
திருச்சி
வணக்கம்.
நமது குறுஞ்செய்தி (SMS) கவிஞர்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் சகோதரிகளில், நான் அண்மையில் நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் ஆண்டுவிழாவில் சந்தித்த திருமதி சுமதி அவர்களும் ஒருவர்.
சுமதியின் கவிதைகள் எனது வலைத்தளங்களிலும், பெரிய கவிதைத் தளமான www.vaarppu.com மிலும் உலகளாவிய பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளன. சமுதாயப்பார்வையும், பெண்ணியச் சிந்தனைகளும் பொதிந்த இவரது கவிதைகள் நான் அங்கம் வகிக்கும் www.groups.google.com/group/ anbudan, thamizhthendral & thamizh amutham, muththamizh குழுமங்களில் வெளிவரவிருக்கின்றன. இணையதளக் குழுமங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ள குறுஞ்செய்திக் கவிஞர்கள் திருமதி தனலட்சுமி பாஸ்கரன், ரம்யா, கலைவாணி ஆகியோரைத் தொடர்ந்து, திருமதி சுமதி அவர்களும் புகழ்பெற்றுத் திகழ எனது நல்வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
திருச்சி
Sunday, October 16, 2011
Thursday, October 13, 2011
சேலம் குறுஞ்செய்திக் குடும்ப விழா!
வணக்கம். சேலம் குறுஞ்செய்திக் குடும்ப விழாவினை சேலம் நகரில் நடத்துவதற்கு தானே முன்வந்து நாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நிகழ்த்தி, அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ள அன்பு சுமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்!
- கிரிஜா மணாளன்
EDtr./www.smspoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com
Wednesday, October 12, 2011
நன்றி! நன்றி!!
அன்புடையீர், வணக்கம்.
09.10.2011 ஞாயிறன்று சேலம் நகரில் சிறப்பாக நடந்தேறிய "குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 2 வது ஆண்டுவிழா மற்றும் 6வது சந்திப்பு" க்கு வந்திருந்து விழாவைச் சிறப்பித்த படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் விரைவில் இத்தளத்தில் பதிவிடப்படும்.
அன்புள்ள,
கிரிஜா மணாளன்
(ஒருங்கிணைப்பாளர்)
திருமதி சேலம் சுமதி
(விழா அமைப்பாளர்)
09.10.2011 ஞாயிறன்று சேலம் நகரில் சிறப்பாக நடந்தேறிய "குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 2 வது ஆண்டுவிழா மற்றும் 6வது சந்திப்பு" க்கு வந்திருந்து விழாவைச் சிறப்பித்த படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் விரைவில் இத்தளத்தில் பதிவிடப்படும்.
அன்புள்ள,
கிரிஜா மணாளன்
(ஒருங்கிணைப்பாளர்)
திருமதி சேலம் சுமதி
(விழா அமைப்பாளர்)
Subscribe to:
Posts (Atom)